கறுப்புப்பணத்தைப் பதுக்க சுவிஸ் வங்கியை ஏன் தேர்வு செய்கிறார்கள் தெரியுமா?

இதுகுறித்து ஆடிட்டர் ஏ.கோபால்கிருஷ்ண ராஜுவிடம் பேசினோம்.


கடந்த பத்தாண்டுகளாக சுவிஸ் வங்கி குறித்த செய்திகள் எல்லா ஊடகங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்திய பண முதலைகளின் பெரும்பாலான கறுப்புப் பணம் சுவிஸ் வங்கியில் போடப்பட்டு பாதுகாக்கப்படுவதாகவும் தகவல்கள் அவ்வப்போது வெளிவருகின்றன.


அப்படி பதுக்கியவர்களின் பெயர்கள்கூட அவ்வப்போது வெளியிடப்படுவதுண்டு.``இந்தியாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையே வங்கித்துறையில் யதேச்சையாக ஒரு வரலாற்று ஒற்றுமை நடந்துள்ளது. ஆம், இந்தியாவில் 1934-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதே 1934-ம் ஆண்டில்தான் சுவிட்சர்லாந்திலும் வங்கித்துறை சட்டம் நடைமுறைக்கு வந்தது. சுவிட்சர்லாந்திலுள்ள வங்கிகளில், யூபிஎஸ் வங்கி (UBS), கிரெடிட் சுஸி பேங்க் (Credit Suisse bank), கன்டோனல் பேங்க் (cantonal bank) ஆகிய மூன்றும் முக்கியமானவை. இவற்றில் கன்டோனல் பேங்க், சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் வங்கி.


வெளிநாட்டைச் சேர்ந்த தனிநபர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்க பெரும்பாலான நாடுகளின் வங்கித்துறைகள் அனுமதிப்பதில்லை. ஆனால், சுவிட்சர்லாந்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த தனி நபர்கள் வங்கிக்கணக்கு தொடங்க அனுமதியுண்டு. ஆனால், வங்கிக்கணக்கு தொடங்குவது அவ்வளவு எளிதானதல்ல. நம் நாட்டில் வாடிக்கையாளர் குறித்து கே.ஒய்.சி பார்த்து முடித்துவிட்டாலே வங்கிக்கணக்கு தொடங்கிவிடலாம். ஆனால், அங்கே வாடிக்கையாளர் பற்றிய விவரங்கள் அனைத்துமே சரியாக இருந்தாலும்கூட, வங்கிக்கணக்கு தொடங்க அனுமதியளிக்க வேண்டுமென்று கட்டாயமில்லை. வங்கிக்கணக்கு தொடங்க அனுமதி மறுக்கவும் வாய்ப்புள்ளதுபாஸ்போர்ட், தொழில் அல்லது பணிகுறித்த விவரங்கள், நிறுவனம் தொடர்பான ஆவணங்கள், லைசென்ஸ் மற்றும் வரித்தாக்கல் விவரங்கள், முதலீடு செய்யவுள்ள பணத்தைச் சம்பாதித்ததற்கான ஆதாரம் மற்றும் தனிப்பட்ட கேள்விகளுக்கும் அங்கு பதில்தர வேண்டும். வங்கிக்கணக்கு குறித்த ரகசியம் காக்கப்படும் என்பதால் அதற்கேற்ப கணக்கு தொடங்குவதற்கான விதிமுறைகள் கடுமையானவை. பொதுவாக உலகெங்கிலும் உள்ள வங்கிகளில், வாடிக்கையாளரின் பெயர், வாடிக்கையாளரின் அடையாள எண் (Customer ID), வங்கிக்கணக்கு எண் ஆகிய மூன்றும் இடம்பெறும். வாடிக்கையாளரின் பெயரை வைத்துதான் வங்கிக்கணக்கை அடையாளப்படுத்துவார்கள். ஆனால், ஸ்விஸ் வங்கிகளில் கஸ்டமர் ஐ.டி மட்டுமே முதன்மையானதாக இருக்கும். வாடிக்கையாளரின் பெயர், வங்கியின் மேல்மட்ட அதிகாரிகள் அளவில்தான் தெரியும். எனவே வெளிநபர்கள் மட்டுமின்றி, வங்கிஊழியர்களேகூட வாடிக்கையாளரை அடையாளம் காண்பது கடினம். சுவிட்சர்லாந்து அரசின் வங்கிச்சட்டப்படி, வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை வெளியில் சொன்னால் அது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும். அதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த வங்கிகளைப் பெருமளவு நாடிவருகிறார்கள்.


Popular posts
கொரோனாவைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்
பிரிட்டனின் பிரதமர், போரிஸ் ஜான்சனுக்கு, 55,'கொரோனா' வைரஸ் தொற்று அறிகுறிகள் தொடர்ந்து இருப்பதால், தனிமையில் இருந்த அவர், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது
சரியான ஆங்ரி பேபியா இருக்கே: வைரலாகும் சூப்பர் ஸ்டார் வீட்டு வாரிசு போட்டோ
இதையடுத்து, அவர் தனிமையில் இருந்து, பணிகளை கவனித்து வந்தார்
மீனா தான் ஒல்லியான பிறகு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்
Image